திருப்பதிக்கு பாதி விலையில் சந்தன கட்டை: ஜெ

Subscribe to Oneindia Tamil

திருப்பதி:

Sandalwoodதிருமலை திருப்பதி கோவிலுக்கு சந்தனக் கட்டைகளை பாதி விலையில் வழங்க தமிழக முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இக் கோவிலுக்குத் தேவையான சந்தனக் கட்டைகள் தமிழகத்தில் இருந்து தான் வாங்கப்படுகின்றன.தமிழக அரசின் வனத்துறை இதனை விற்று வருகிறது.

இந் நிலையில் இந்தக் கட்டைகளை இலவசமாக வழங்க முன் வர வேண்டும் என முதல்வர்ஜெயலலிதாவுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடிதம் எழுதியது. இதையடுத்து தேவஸ்தானஅதிகாரியையும் வனத்துறையினரையும் அழைத்து ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

அப்போது பல கோவில்களுக்கும் தமிழகத்தில் இருந்து சந்தனக் கட்டைகள் விற்கப்பட்டு வரும்நிலையில் திருப்பதிக்கு மட்டும் இலவசமாகத் தருவது சரி வராது என்று கூறிய ஜெயலலிதா,வேண்டுமானால் பாதி விலைக்குத் தருவதாகத் தெரிவித்தார்.

இதன்படி திருப்பதி கோவிலுக்கு ஆண்டுதோறும் தேவைப்படும் ரூ. 30 லட்சம் பெறுமானமுள்ளஒன்றரை டன் சந்தனக் கட்டைகளை தமிழக அரசு இனி ரூ. 15 லட்சத்துக்கு வழங்கும்.

இதற்காக தமிழக முதல்வருக்கு தேவஸ்தானத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பிறந்த நாள்: ஜெ. மாலை அணிவிப்பு

இதற்கிடையே தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 96வது பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 15ம்தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரதுசிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவிப்பார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் நேரில் பங்கேற்பதை ஜெயலலிதா தவிர்த்து வந்ததுகுறிப்பிடத்தகது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+