பாப்பாபட்டி தேர்தல்: திருமாவளவன் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மீண்டும் மீண்டும் தேர்தல் நடத்தியும் மக்களுக்குப் பலன் இல்லாமல் போய் விட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டிபஞ்சாயத்துக்களுக்கு மறுபடியும் தேர்தல் நடத்துவதால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப் போவதில்லை என்றுவிடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துக்களில் நிலவும்அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்காமல், அங்கு மீண்டும் மீண்டும் தேர்தல் நடத்துவதால் ஒரு பலனும் இல்லை.

இந்த பஞ்சாயத்துக்களில் கடந்த முறை நடந்த தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சுப்பன் மற்றும்பூங்கொடியன் ஆகியோரை நிறுத்தினோம். அவர்களால் இன்னும் அந்த கிராமங்களுக்குள் நுழைய முடியவில்லை.2 ஆண்டுகளாக அவர்கள் வெளியூரில் வசிக்க வேண்டிய அவலம் நிலவுகிறது.

இந்த பஞ்சாயத்துக்களில் வேட்பு மனு தாக்கல் செய்வோரின் நிலையும் இப்படித்தான் இருக்கும். முதலில் இந்தநிலையை மாற்ற வேண்டும். எனவே பாப்பாபட்டி, கீரிப்பட்டி தலித் பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடத்துவதைதள்ளிப்போடக் கோரி செப்டம்பர் 30ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார்அவர்.

சர்ச்சைக்குரிய பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் தலித் பஞ்சாயத்துக்களில் கடந்த 1996ம் ஆண்டு முதல்இதுவரை பஞ்சாயத்துத் தலைவராக யாரும் தேர்ந்தெடுக்கப்பட முடியாத சூழ்நிலை நிலவுகிறது. தேர்தல் நடந்துதலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பஞ்சாயத்துத் தலைவராக தேர்வு செய்யப்பட்டாலும், அடுத்த நாளே அவர்கள்ராஜினாமா செய்து விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+