சிலை கரைப்பு: அப்பீல் செய்கிறது இந்து முன்னணி
ராமேஸ்வரம்:
ரசாயானப் பூச்சு அடங்கிய பெரிய விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கக் கூடாது என்று சென்னைஉயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இந்து முன்னணி அமைப்பு முடிவுசெய்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியின்போது, ரசாயனப் பூச்சு கொண்ட விநாயகர் சிலைகள், பிளாஸ்டர் ஆப் பாரீஸில்செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், பெயிண்ட் அடிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் உள்ளிட்டவற்றை கடல்உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதற்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகஅவர் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி வந்தால் மட்டும் தமிழகத்தில் பலருக்கு சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், மாசுகட்டுப்பாடு குறித்தும் கவலை வருவது ஏன் என்று தெரியவில்லை.
தமிழகத்தில் உள்ள பல்வேறு தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளால் கடலும், குடிநீர்நிலைகளும் மாசுபட்டு மக்கள் அவதிப்படுவது இவர்கள் கண்களுக்கு ஏன் தெரிவதில்லை? விநாயகர் சதுர்த்திமட்டும்தான் இவர்களுக்கு தெரியுமா?
பெரிய பெரிய விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் வைபவத்தை பல காலமாக நடத்தி வரும் மும்பை,ஹைதராபாத் போன்ற நகரங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. கொல்கத்தாவிலும் துர்காபூஜையின்போது இதுபோன்ற கூக்குரல்கள் எழுவதில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் இதுபோன்றபிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. காரணம், இது தி.க., திமுக தோன்றிய பூமி. அதனால்தான் இத்தனைபிரச்சினைகளும்.
சென்னை நகரில் 5,000 சிலைகளையும், தமிழகம் முழுவதிலும் 25,000 சிலைகளையும் நிறுவ முடிவுசெய்துள்ளோம். இந்த சிலைகளை வேதிப்பொருள் இல்லாத, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களால்தயாரிக்க முடிவு செய்துள்ளோம்.
தியாகராய நகரில் கொண்டக் கடலையால் ஆன விநாயகரை தயாரிக்கவுள்ளோம். இதை கடலில் கரைத்தால்,மீன்களுக்கு நல்ல இரையாகும். மெரீனா கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதித்திருப்பதைவன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications