சிபிஐயிடம் வழக்கு ஒப்படைப்பு
சென்னை & மதுரை:
ஜெயலட்சுமி விவகாரம் தொடர்பான வழக்கு தமிழக போலீசாரால் இன்று முறைப்படி சிபிஐயிடம்ஒப்படைக்கப்பட்டது.
சென்னை சிபிஐ அலுவலகத்தில் இந்த வழக்கும் நீதிமன்ற உத்தரவும் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்தவழக்கை விசாரிக்க அடுத்த சில நாட்களில் துணை இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரியை சிபிஐ நியமிக்கும்.இதையடுத்து அவர் மதுரையில் முகாமிட்டு விசாரணையைத் தொடங்குவார் என்று தெரிகிறது.
மதுரையில் சிபிஐக்கென அலுவலகம் ஏதும் இல்லை. 1994ல் இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கொலைவழக்கையும், 1996ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குண்டு வெடிப்பு வழக்கிலும் சிபிஐ விசாரணைநடந்தபோது மதுரையில் தற்காலிகமாக சிபிஐ அலுவலகம் அமைக்கப்பட்டது.
அதே போல தற்போதும் ஜெயலட்சுமி வழக்கை விசாரிப்பதற்கும் மாநில போலீஸார் உதவியுடன் தற்காலிமாக ஒருசிபிஐ அலுவலகம் அமைக்கப்படவுள்ளது.
அரவக்குறிச்சியிலும்...
இதற்கிடையே ஜெயலட்சுமி மீது அரவக்குறிச்சியிலும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சிபிஐ அதிகாரிகள்அங்கும் விசாரணை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேல் அரவக்குறிச்சியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது, ஜெயலட்சுமியுடன்தோகைமலையில் தங்கியிருந்தாகவும், அரவக்குறிச்சி நகைக்கடையில் நகை வாங்கி விட்டு, அவர் பணம் பாக்கிவைத்ததாகவும் அரவக்குறிச்சி போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
ஜெயலட்சுமி வழக்கு இப்போது சிபிஐக்கு மாற்றப்பட்டதால், சிபிஐ அதிகாரிகள் அரவக்குறிச்சியிலும்விசாரணையில் ஈடுபடலாம் என்று கருதப்படுகிறது. இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு தற்போது அரியலூரில்பணிபுரிவதால் அங்கும் சிபிஐ விசாரணை இருக்கும் என்று கூறப்படுகிறது.