என் இலக்கு தமிழர் நலன்: ஜெயலலிதா
சென்னை:
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்க் கட்சித்தலைவர்களை மறைமுகமாக மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார். குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி மீது கடும்தாக்குதல் தொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
செப்டம்பர் 15. உலகம் கண்ட ஒப்பற்ற அறிஞர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்.ஆண்டுக்கு 356 நாட்கள் உண்டு என்றாலும், புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த அந்த செப்டம்பர்திருநாளுக்கு இணைதான் ஏது?
அண்ணாவின் திருவுருவை இதயத்தில் தாங்கி, அவரது புகழை தரணிக்கே பறைசாற்றிய புரட்சித் தலைவர்எம்ஜிஆரின் வழியில் வந்த நமக்கு, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் தகது வேறு எவரைக்காட்டிலும் அதிகமுண்டு.
இன்று அண்ணாவின் தம்பிகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் சிலர் அவர் வலியுறுத்திச் சென்ற சமத்துவம்,சம தர்மத்தை பின்பற்றுகிறார்களா?. பின்பற்றுகிறார்கள்- தங்கள் குடும்பங்களில் மட்டும்.
அதே நேரத்தில் இவர்கள் சமத்துவத்தையும் சம தர்மத்தையும் மக்களுக்கு உபதேசிக்காத மேடையில்லை,நாளில்லை. இவர்கள் ஊருக்கு உபதேசிகள்.
ஆனால், நான் சமத்துவத்தையும் சம தர்மத்தையும் சாதித்தே தீருவது என்று உறுதி பூண்டிருக்கிறேன், சாதித்தும்வருகிறேன் என்பதை என் அன்பு உடன்பிறப்புக்கள் அறிவார்கள். சாதி, மதசார்பின்மையின்றி அனைவரையும் சமநிலையில் வைத்து கலவரமற்ற அமைதிப் பூங்காவாக தமிழகத்தை முன்னேற்றி வருகிறது அதிமுக அரசு.
இதைக் கண்டு சில பகை மனிதர்கள், என்னையும் கழகத்தையும் மக்கள் பாராட்டுகிறார்களே என்ற பொறாமையில்புழுங்கிப் போய், என்னென்ன தீமை இழைக்கலாம், யாரோடு சேர்ந்து இடர் விளைவிக்கலாம் என்று நாளொருதீமையும் பொழுதொரு சூதும் செய்து வருகிறார்கள்.
அந்த மட்டமான மனிதர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அறிந்தால் மட்டும் போதாது, அவர்களைமக்களுக்கும் அடையாளம் காட்ட வேண்டும். இது அண்ணாவின் தீர்ப்பு.
ஆட்சித் தேரை இலக்கு நோக்கி செலுத்துவதில் என் ஆற்றல் முழுவதையும் செலவிட விடாமல் என் கவனத்தைதிசை திருப்ப முயலும் இந்த மகா மட்டமான மனிதர்களை நான் பொருட்படுத்துவதில்லை. என் இலக்கு தமிழர்நலன் தான். என் வழி அண்ணா வழி.
எத்தனை சோதனைகள் வந்தாலும் இந்த லட்சிய பயணம் தொடரும். மக்கள் என் மீது வைத்துள்ள பாசமும்விசுவாசமுமே என் மகத்தான ஆயுதங்கள்.
நமது வெற்றிப் பயணம் தொடர அண்ணா பிறந்த நாளில் உறுதி ஏற்போம். அண்ணா வழியில் நடப்போம்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாகவே அண்ணா பிறந்த நாளன்று அமைச்சர்களை விட்டே அவரது சிலைக்கு மாலைஅணிவிக்கச் செய்து வந்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்த ஆண்டு தானே மாலை அணிவிக்க முடிவு செய்துள்ளார்.
கைத்தறிக்கு கூடுதல் தள்ளுபடி:
இதற்கிடையே அண்ணா பிறந்த நாளையொட்டி கைத்தறித் துணிகளுக்கு வழக்கமாக தரப்படும் 20 சதவீததள்ளுபடியுடன் மேலும் 10 சதவீத தள்ளுபடியும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
வரும் 15ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோ ஆப்டெக்ஸ் உள்ளிட்ட அரசின் அனைத்து கைத்தறித் துணி விற்பனைநிலையங்களிலும் இந்த 30 சதவீத தள்ளுபடி விலையில் ஆடைகளை வாங்கலாம்.












Click it and Unblock the Notifications