அண்ணா பிறந்த நாள்: கோவையில் கருணாநிதி
சென்னை:
அண்ணா பிறந்த நாள் உள்பட திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதி இன்றுகோவை செல்கிறார்.
தனது நடை பயணத்தை சென்னையில் முடித்து அண்ணா பிறந்த நாளைக் கொண்டாட வைகோ முடிவுசெய்தபோதேகோவையில் பிரமாண்டமான விழாவை நடத்துவதென முடிவு செய்துவிட்டது திமுக.
இதற்காக இன்றிரவு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவை செல்கிறார் கருணாநிதி.
கீதையை பழித்துப் பேசியதால் கருணாநிதிக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என சில இந்து அமைப்புகள்மிரட்டியுள்ள நிலையில், திமுக அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் கருணாநிதியின்வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிஐடி பொறியியல் கல்லூரி கலை அரங்கில் நடக்கும் விழாவில் திமுக அறக்கட்டளை சார்பில் மேல்நிலைக்கல்வியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நிதி உதவியும் சான்றிதழும் வழங்குகிறார்கருணாநிதி.
பின்னர் திமுக முப்பெரும் விழாவில், விருதுநகர் கே.பி.எஸ். பாண்டியனுக்கு பெரியார் விருதையும்,குமாரபாளையம் ஜே.கே.கே. சுந்தரத்துக்கு அண்ணா விருதும், அந்தமான் ஏ.ஆர். மருதவாணனுக்கு பாரதிதாசன்விருதையும், தஞ்சை கு. சுல்தனுக்கு கலைஞர் விருதையும் கருணாநிதி வழங்குகிறார்.
நாளை மாலை சிதம்பரம் பூங்காவில் பொதுக் கூட்டத்திலும் கருணாநிதி பேசுகிறார்.












Click it and Unblock the Notifications