கோபால்: பொடா குழுவுக்கு எதிராக தமிழகம் வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு பொடா வழக்கு ஆவணங்களை வழங்க வேண்டும் என்று மறு ஆய்வுக் குழுவிதித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில்இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
கோபால் மீதான பொடா வழக்கு ஆவணங்களை 14ம் தேதிக்குள் (இன்று) அவரிடம் தமிழக அரசு வழங்கவேண்டும் என மறு ஆய்வுக் குழு நீதிபதி சஹார்யா உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதில் உள்ள சில ஆவணங்கள்மிக ரகசியமானவை என்றும், அதை கோபாலிடம் தர முடியாது என்றும் தமிழக அரசு கூறி வந்தது. அரசின் இந்தவாதத்தை பொடா மறு ஆய்வுக் குழ ஏற்கவில்லை.
இதையடுத்து, பொடா மறு ஆய்வுக் குழுவின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு அவசர மனு தாக்கல் செய்தது. இதன் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications