குடும்ப கட்டுப்பாடு: முஸ்லிம் வாரியம் ஆலோசனை
டெல்லி:
நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை பெருக்கம், முஸ்லீம்களின் மக்கள் தொகை வளர்ச்சி ஆகியவை குறித்துவிவாதிக்க அகில இந்திய இஸ்லாமிய சட்ட வாரியம் முன் வந்துள்ளது.
மேலும் இரு குழந்தைத் திட்டம் குறித்து இஸ்லாமிய மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வது குறித்தும்அந்த வாரியம் விவாதிக்கவுள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் தொகை வளர்ச்சி குறித்து மத்திய கணக்கெடுப்பு வாரியம் வெளியிட்டதவறான புள்ளி விவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்சசில் வாரியம் தெரிவித்ததைவிட வளர்ச்சிவிகிதம் குறைவாகவே உள்ளது தெரியவந்தது.
ஆனாலும், மற்ற மதத்தினரை விட சராசரியாக மக்கள் தொகை வளர்ச்சி முஸ்லீம்களிடையே அதிகமாகஇருப்பதால் அதை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி ஆகியவை பிரச்சனையாக்கி வருகின்றன.
இந் நிலையில் இஸ்லாமிய மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கே மக்கள் தொகை இடைஞ்சலாகஇருப்பதால், அதைக் கட்டுப்படுவது குறித்து விவாதிக்க இஸ்லாமி சட்ட வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்த வாரியத்தின் துணைத் தலைவர் மெளலானா சையத் காப்ல் சித்திக் இந்த விவாதத்துக்கு அழைப்புவிடுத்துள்ளார். ஆனால், அவரது இந்த யோசனைக்கு வாரியத்தின் சில உறுப்பினர்களிடையே எதிர்ப்புதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முஸ்லீம் மக்கள் தொகை வளர்ச்சி குறித்து தவறான தகவல் தரப்பட்டது குறித்து விசாரணைக்குமத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் முன்பு ஆட்சியில் இருந்த பா.ஜ.கவின் தலையீடு இருந்ததா என்றும் விசாரிக்க உள்துறைஅமைச்சர் சிவராஜ் பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.