பெட்ரோல் விலை: தமிழக அரசு மீது அய்யர் புகார்
டெல்லி:
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் விற்பனை வரி மிக அதிகமாக இருப்பதாகவும் இதனால்நுகர்வோர் அதிக விலைகொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் பெட்ரோலியத்துறை அமைச்சர்மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.
அய்யர் நிருபர்களிடம் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த அதன் மீதான இறக்குமதி, சுங்க வரிகளை கணிசமான அளவுக்குக்குறைத்துள்ளோம். அதே போல விற்பனை வரியை மாநில அரசுகளும் குறைத்தால் பெட்ரோல், டீசலின் விலைமேலும் குறையும்.
இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினேன். ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாமட்டுமே எனது கடிதத்துக்கு பதில் தரவில்லை. மாநில அரசுகளின் புதிய விற்பனை வரி விகிதம் தெரியவந்தால்,அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயிக்கும்.
தமிழகத்தில் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் விதிக்கப்படும் விற்பனை வரி மிக அதிகமாக உள்ளது. இதனால்விற்பனை வரியை தமிழக அரசு குறைக்காத வரை இவற்றின் விலையும் குறைய வாய்ப்பே இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications