கைதாவாரா வைகோ?
சென்னை:
மறுமலர்ச்சி நடை பயணத்தில் முடிவில் நாளை (15ம் தேதி) வைகோ தலைமையில் தீவுத்திடலில் நடக்கவுள்ளபொதுக் கூட்டத்துக்கு மதிமுகவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அண்ணா பிறந்த நாள் மற்றும் நடை பயண நிறைவு விழாக் கூட்டமாக இது நடத்தப்படுகிறது.
இதில், எவரெஸ்ட் உச்சிக்குச் சென்ற முதல் இந்தியரான கேப்டன் மன்மோகன் சிங் கோஹ்லி, இந்து ஆசிரியர் என்.ராம், இயக்குனர் பாரதிராஜா, எம்.எஸ். உதயமூர்த்தி, கவிஞர் வாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான மதிமுகவினர் சென்னையில் குவியஆரம்பித்துள்ளனர்.
வைகோவின் நண்பரான தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் கூட்டத்துக்கு பிரமாண்டமானஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் செயல்பாடுகள் குறித்த அறிவிப்புகளை இக் கூட்டத்தில் வைகோ அறிவிப்பார்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா இன்று ஆலோசனை நடத்தினார். அப்போதுதடையைத் தாண்டி சென்னையில் வைகோ நடைபயணம் மேற்கொண்டால் அதைத் தடுக்க அவரை கைது செய்வதுஎன்றும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications