அண்ணா சிலைக்கு ஜெயலலிதா மாலை
சென்னை:
முன்னாள் தமிழக முதல்வரும் திராவிட இயக்க நிறுவனர்களில் ஒருவருமாகிய அறிஞர் அண்ணாவின் 96வதுபிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்தார்.
கடந்த சில வருடங்களாகவே இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில் இன்றுஅண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அமைச்சர்கள் அனைவரும் மாலையணிவித்தனர்.
இதையடுத்து அண்ணா பிறந்த நாள் மலரையும் ஜெயலலிதா வெளியிட்டார். அதை பொதுப்பணித்துறை அமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
அதே போல மாநிலம் முழுவதும் அதிமுகவின் சார்பில் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளுக்கும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தினத்தையொட்டி திமுகவின் சார்பில் கோவையில் முப்பெரும் விழாவும், மதிமுக சார்பில் தீவுத் திடலில்பொதுக் கூட்டமும் நடப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications