தீ: தமிழகத்தில் ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு
சென்னை:
சென்னையில் பாரதி டெலிகாம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தமிழகத்தில் ஏர்டெல் மொபைல்போன்களின் சர்வீஸ் மற்றும் டச் டெல் தொலைபேசிகளின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதிகாலை 4 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாரதி டெலிகாம் நிறுவன கட்டடத்தின் முதல் தளம்முழுவதுமாக எரிந்துவிட்டது. இதில் மொபைல் மற்றும் டச் டெல் தொலைபேசி சேவைக்கான சர்வர்கள்,ஸ்விட்சுகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள், கண்காணிக்கும் கம்யூட்டர்களும் எரிந்துபோய்விட்டன.
பல தீயணைப்பு வண்டிகளும் சுமார் அரை மணி நேரம் போராடித் தான் தீயை அணைக்க முடிந்தது.
இதனால் இந் நிறுவனத்தின் ஏர்டெல் மொபைல்போன் சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டது. டச் டெல் தரைவழிதொலைபேசி சேவையும் பாதிக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக இத் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.
சுமார் 6 மணி நேரத்துக்குப் பின் இன்று காலை 10 மணியளவில் தொலைபேசி சேவைகள்சீர்படுத்தப்பட்டுவிட்டதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications