சித்தப்பா மகனுடன் காதல்: மகளை கொன்றார் தந்தை
Subscribe to Oneindia Tamil
களக்காடு:
சித்தப்பா மகனைக் காதலித்து வீட்டை விட்டு ஓடிய மகளை வெட்டிக் கொன்றார் தந்தை.
களக்காடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் சுபா ஆனந்தி (22). பிஎஸ்சி படிப்பைபாதியில் விட்ட சுபா, தனது சொந்த சிதப்பாவின் மகனான செல்லதுரையைக் காதலித்து வந்தார்.
இருவருக்கும் அண்ணன், தங்கை முறை என்பதால் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார் பெருமாள்.
இந் நிலையில் செல்லதுரையுடன் வீட்டைவிட்டு ஓடினார் சுபா. பின்னர் மீண்டும் திரும்பி வந்தார்.
அப்போது மகளை செல்லதுரை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து அரிவாளால் மகளை பெருமாள் சரமாரியாக வெட்டினார்.
இதில் அந்த இடத்திலேயே சுபா ஆனந்தி இறந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி பெருமாளைக் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications