பான் மசாலா: தடையை நீக்கிய உயர் நீதிமன்றம்
சென்னை:
பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை வஸ்துக்களை விற்க தடை செய்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவைசென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருள்களைத் தமிழ்நாட்டில்தயாரிக்கவும் விற்கவும் அரசு தடை விதித்தது.
இதை எதிர்த்து பான்பராக் உள்ளிட்ட பான் மசாலா தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, பான் மசாலா விற்பனையைத்தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியதை சுட்டிக்காட்டி, மேல் முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி, நீதிபதி அசோக்குமார் ஆகியோர் தங்களதுதீர்ப்பில்,
பான் மசாலாவுக்குத் தடை விதித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.இதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர சட்டசபைக்கு அதிகாரம் இல்லை. தயாரிப்பாளர்கள் மற்றும்விற்பனையாளர்களிடம் இருந்து அரசு பறிமுதல் செய்த பான் மசாலாவை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications