கோத்தகிரியில் வசனம் எழுதும் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
கோத்தகிரி:
தனது கண்ணம்மா படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுவதற்காக திமுக தலைவர் கருணாநிதி கோத்தகிரிசென்றுள்ளார்.
கோவையில் திமுக முப்பெரும் விழாவை முடித்து விட்டு கருணாநிதி, கோத்தகிரிக்கு காரில் புறப்பட்டார்.அவருடன் மனைவி ராஜாத்தி அம்மாள், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, முன்னாள் எம்.எல்.ஏ.குண்டன் ஆகியோர் கோத்தகிரி வந்தனர்.
கோத்தகிரி அருகே ராப்ராய் எஸ்டேட்டில் குண்டனுக்கு சொந்தமான பங்களாவில் கருணாநிதி தனதுகுடும்பத்தினருடன் தங்கி உள்ளார்.
துரைமுருகன், பொன்முடி, கோவை மாவட்ட திமுக செயலாளர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் கோத்தகிரிடான்பாஸ்கோ அருகில் உள்ள ஸ்டோன் ஹவுசில் தங்கி உள்ளனர்.
கோத்தகிரியில் சில நாட்கள் தங்கியிருந்து, கண்ணம்மா படத்திற்கு கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.ஓய்வும் எடுக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications