இலங்கை அமைதிப் பேச்சு: சிக்கல் நீடிப்பு
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வதில் ஏற்பட்டுள்ள தாமதம், தனக்கு ஆழ்ந்த கவலையை அளிப்பதாகஇலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
நார்வே அமைதித் தூதர் எரிக் சோல்ஹைம் உடனான சந்திப்பில், அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்குவிடுதலைப் புலிகள் மறுப்பு தெரிவிப்பது மிகுந்த கவலையைத் தருகிறது.
புலிகளின் இந்த முடிவு திருப்தியளிப்பதாக இல்லை. கடந்த 2002ல் கையெழுத்தான ஓஸ்லோ ஒப்பந்தத்தைநிறைவேற்றுவதில் அதிபர் சந்திரா அக்கறையாக உள்ளார். இதை நார்வே தூதரிடம் சந்திரிகா தெரிவித்தார் என்றுஅந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், சுயாட்சி அதிகாரம் குறித்துக் கூட விவாதிக்கத் தயார் என்று நாங்கள் அறிவித்த பின்னரும்பேச்சுவார்த்தையைத் தொடங்க முன்வராமல் இலங்கை அரசு தான் இழுத்தடித்து வருகிறது என்று புலிகள் நேற்றுகுற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.