கும்பகோணம்: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
தீ விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பைமேம்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம்இது குறித்து பதில் அளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து விசாரிக்க நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணைக் கமிஷனை தமிழக அரசு நியமித்துள்ளது.
இந் நிலையில் நாடு முழுவதுமே பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில்அவினாஷ் என்பவர் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில்,
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ஒரு பள்ளிக்கூடம் இடிந்து விழுந்ததில் 35 குழந்தைகள் பலியானார்கள்.அதனையடுத்து பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு,மாநில அரசுகளை வலியுறுத்தியது. அவை நிறைவேற்றப்படாததால் விபத்துகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
கடந்த 1995ம் ஆண்டு அரியானா மாநிலம் டாப்வாலி என்ற இடத்தில் ஒரு பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்புவிழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 400 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஜூலை மாதம் கும்பகோணத்தில் நடைபெற்ற தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.
எனவே பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கும் முன், அவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாஎன்பதையும், அவசர காலத்தில் வெளியேற போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, நீதிபதி சின்ஹா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பள்ளிகளின்பாதுகாப்பு குறித்து பதில் அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டது.