Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலட்சுமியின் புகார் பச்சைப் பொய்: பன்னீர்செல்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayalakshmiஜெயலட்சுமியுடன் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது, அவரை நான் சந்தித்ததே இல்லை என்றுபொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயலட்சுமியுடன் தொடர்பு கொண்டிருந்த காவல்துறைஅதிகாகள் பெயர்கள் முதலில் வெளியாகி தமிழகத்தை கலக்கியது. இப்போது அரசியல்வாதிகள் பெயர்களைஜெயலட்சுமி தனது மதுரை எல்லீஸ் நகர் வீட்டிலிருந்து வெளியிட்டு வருகிறார்.

இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த சமீபத்திய பரபரப்பு பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பருக்காக,முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திடம் சூட்கேஸ்களில் வைத்துப் பணம் கொடுத்ததாகவும், அவரை 3 முறைசந்தித்ததாகவும் கூறியிருந்தார்.

Pannerselvamஅதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், ஜெயலட்சுமி இந்தப் பேட்டியை அளித்திருப்பதாக பேச்சுஎழுந்துள்ள நிலையில், ஜெயலட்சுமியின் இந்தப் பேட்டியை பன்னீர்செல்வம் கடுமையாக மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகாசி ஜெயலட்சுமியின் வழக்கு வெளியே வரும்வரையில் அவரது பெயரைக் கூட நான் கேள்விப்பட்டது இல்லை. அவரை நான் பார்த்ததும் இல்லை. அவர் கூறும்போலீஸ் அதிகாரிகளையும் நான் சந்தித்தது இல்லை.

இது அபாண்டமான, பொய்யான புகார். முதலில், எனது உதவியாளரை மட்டுமே தெரியும், என்னைசந்தித்ததில்லை என்று ஜெயலட்சுமி கூறியிருந்தார். ஆனால் இப்போது எனது பெயரையும் இழுத்திருக்கிறார்.

Jayalakshmiயாரோ சில விஷம சக்திகளின் உத்தரவுக்கேற்ப, அதிமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறுகூறியுள்ளார் ஜெயலட்சுமி என்று நினைக்கிறேன். நீதிமன்றத்தில் 31 நாட்கள் இந்த வழக்கு விசாரணையில்இருந்தபோது என் மீது எந்தக் குற்றமும் சாட்டாத ஜெயலட்சுமி இப்போது புதுக் கதை விட்டுள்ளார்.

இப்படி அபாண்டமான பொய்யைச் சொல்ல அவருக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. கடந்தமூன்றரை ஆண்டுகாலமாக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் ஒரு நல்லாட்சி நடந்து வருகிறது. யாராலும்எந்தக் குறையும் சொல்ல முடியாத ஆட்சி நடந்து வரும் சூழலில், அரசுக்கும் எனக்கும் கெட்ட பெய் ஏற்படுத்தமுயலும் நாலாந்தர அரசியல்வாதிகளை தமிழக மக்கள் விரைவில் அடையாளம் கண்டுகொள்ளப் போவது உறுதி.

அதிமுக அரசுக்கு எதிராக எழுதுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது இந்தியா டுடே இதழ்.

நா கூசாமல் பொய் சொன்ன ஜெயலட்சுமி, அதை வெளியிட்ட இந்தியா டுடே ஆகியவை மீது சட்டப்பூர்வமானநடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார் பன்னீர்செல்வம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+