100 கவிஞர்களுடன் டெல்லி செல்லும் வைரமுத்து
சென்னை:
தமிழை செம்மொழியாக அறிவிக்கக் குரல் கொடுத்த செம்மல்கள் ஒவ்வொருவருக்கும் தமிழுலகம் உலகம் நன்றிகூறுகிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்மொழி என்ற அறிவிப்பால், இன்னொரு மொழிக்கான நாற்காலியைப்பகிர்ந்து கொள்வதல்ல தமிழின் நோக்கம். தனக்கான தனி நாற்காலியைத் தக்க வைத்துக் கொள்வதே இதன்நோக்கம்.
தமிழ்- சமஸ்கிருதம் என்ற இரண்டு கண்களால்தான் இந்தியப் பண்பாட்டை முழுமையாக அளந்து பார்த்திடமுடியும் என்பது அறிவுலகத்தின் கருத்து.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டால் நூறு கவிஞர்களோடு டெல்லி சென்று, அதை அறிவிக்கக் காரணமாய்இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பேன் என்று சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தேன்.
அதன்படி விரைவில் நூறு கவிஞர்களோடு டெல்லி செல்வோம். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து நன்றி சொல்வோம் என்று கூறியுள்ளார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications