காங்கிரஸ் பேரணிக்கு சென்னையில் அனுமதி மறுப்பு
சென்னை:
காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 25ம் தேதி சென்னையில் நடத்தவிருந்த சைக்கிள் பேரணிக்கு காவல்துறைஅனுமதி மறுத்துள்ளது.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 25ம் தேதிசைக்கிள் பேரணி நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் தெரிவித்திருந்தார்.
சென்னையில் நடைபெறும் சைக்கிள் பேரணிக்கு வாசன் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் தற்போது சைக்கிள் பேரணி நடத்த காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே சைக்கிள் பேரணி போன்றவை அனுமதிக்கப்படும். வரும்ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறவுள்ளதால், இந்த வாரம் அனுமதி தர முடியாது என்றுகாவல்துறை தரப்பில் காங்கிரஸிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் பேரணி தள்ளிப் போகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications