For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் ஜெயலட்சுமி: தாலியை தர தாய் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சிவகாசி:

Jayalakshmiநீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக தாலியைக் கழற்றித் தருமாறு சிவகாசி போலீஸார் கேட்டதை ஏற்கஜெயலட்சுமியின் தாயார் திருவேங்கடத்தம்மாள் மறுத்து விட்டார்.

ஜெயலட்சுமியின் தந்தை அழகர்சாமி சிவகாசி காவல் நிலையத்தில் கொடுத்த ஒரு புகாரில், சப் இன்ஸ்பெக்டர்ஷாஜகான், ஏட்டு கண்ணன், நகைக் கடை உரிமையாளர் முருகவேல் ஆகியோர் தனது மனைவிதிருவேங்கடத்தம்மாள், மகன் சீனிவாசன் மற்றும் ஜெயலட்சுமியின் குழந்தை ஆகியோரை கடத்தியதாக புகார்கூறியிருந்தார்.

இதுதொடர்பாக ஷாஜகான், கண்ணன், முருகவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.அழகர்சாமி கூறியிருந்த புகாரில், திருவேங்கடத்தம்மாள் அணிந்திருந்த தாலியுடன் கூடிய தங்கச் சங்கிலியைகுற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் சேர்ந்து அறுத்து விட்டதாக கூறியிருந்தார்.

ஆனால் திருவேங்கடத்தம்மாள் தாலியை மட்டும் இறுகப் பிடித்துக் கொண்டு அதைக் காப்பாற்றியதாகவும்அழகர்சாமி தனது புகாரில் கூறியிருந்தார்.

இந் நிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்காக சமர்ப்பிப்பதற்காக தாலியைக் கழற்றித் தருமாறு விசாரணைஅதிகாரியான இன்ஸ்பெக்டர் சந்தானம், திருவேங்கடத்தம்மாளிடம் தெரிவித்தார். ஆனால் கணவர் உயிருடன்இருக்கும்போது தாலியை எப்படிக் கழற்றுவது என்று கூறிய திருவேங்கடத்தம்மாள் தாலியைக் கழற்றித் தர மறுத்துவிட்டார்.

சென்னையில் ஜெயலட்சுமி:

இதற்கிடையே ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ விசாரிப்பதை எதிர்த்து அரசு தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு மீதானவிசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை நடக்கிறது. இதற்காக ஜெயலட்சுமி சென்னை அழைத்துவரப்பட்டுள்ளார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கொண்டு வரப்பட்ட அவர் திருவல்லிக்கேணியில் உள்ள மகளிர்காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X