விநாயகர் ஊர்வலத்துக்கு 10,000 போலீஸார் பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் வரும் 26ம் தேதி 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகளில் பெரும்பாலானவற்றை வரும்26ம் தேதி கரைக்கவுள்ளார்கள்.

மெரீனா கடற்கரையில் எந்த சிலையையும் கரைக்க அனுமதி இல்லை. சிலைகளை கரைக்க பட்டினப்பாக்கம்,சீனிவாசபுரம் உள்பட 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்லும்போது,10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளை கரைக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை நாங்கள் அமல்படுத்துவோம்.

சென்னையில் ஈவ் டீசிங்கில் ஸ்டெபானி இறந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட நட்சத்திர ஹோட்டலுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுஉள்ளது.

500 சதுர அடிக்கு மேல் உள்ள இடங்களில் மக்கள் கூடும் இடத்திற்கு காவல்துறையிடம் இருந்து லைசென்சு வாங்கவேண்டும். எதற்காக அங்கு மக்கள் கூட்டப்படுகிறார்கள் என்பதை சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகிகள்தெரிவிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில்தான் நட்சத்திர ஓட்டல்களுக்கு கலாச்சார நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.இந்த விதிமுறைகளை மீறுவோர் லைசென்சை ரத்து செய்ய எங்களுக்கு அதிகாரம் உள்ளது.

சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+