For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோபால்: குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நக்கீரன் கோபால் மீது பொடா சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அடுத்த மாதம் 18ம் தேதி வரைசென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோபால் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று நக்கீரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி மிஸ்ரா, நீதிபதி சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்குவந்தது.

கோபால் சார்பில் ஆஜாரன மூத்த வழக்கறிஞர் நடராஜன், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கோபாலுக்கு எதிராகநடைபெறும் விசாரணையில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அடுத்த மாதம் 4-ம் தேதி வரைஉச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அத் தடையை நீடிக்க வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து அடுத்த மாதம் 18ம் தேதி வரை தடையை நீடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே அக்டோபர் 4ம் தேதி வரை கோபால் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றமும் தமிழகபோலீசுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X