கம்யூ. அலுவலகம் தாக்குதல்: கருணாநிதி கண்டனம்
சென்னை:
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம்தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டதையடுத்து அப் பகுதியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஅலுவகத்தை இந்து முன்னணியினர் தாக்கினர். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினரும் பதிலடித் தாக்குதல்நடத்தினர். இந்த மோதல் தொடர்பாக 6 கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீதும், அந்தக் கட்சியின் கொடிக் கம்பங்கள் மீதும் மதவெறிக்கட்சியினர் சிலர் வன்முறைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
காவல்துறையினர் இத்தகைய வன்முறைச் செயல்களைக் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது,தீப்பொறியை ஊதி விடுவதற்குச் சமமாகும். எனவே இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கைமேற்கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.