கடும் புயல்: ஜமைக்காவுக்கு இந்தியா நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கடும் சூறாவளிப் புயலால் வரலாறு காணாத அளவுக்கு பெரும் சேதத்தை சந்தித்துள்ள ஜமைக்கா மற்றும் கிரணடா ஆகிய நாடுகளுக்குஇந்தியா நிதியுதவி அறிவித்துள்ளது.
சமீபத்தில் ஹரிக்கேன் இவான் என்ற சூறாவளி கரீபியன் தீவுகளை மிகக் கடுமையாகத் தாக்கியது. இந்த சூறாவளியால் அமெரிக்காவின்புளோரிடா மாகாணமும் பாதிக்கப்பட்டது.
ஜமைக்கா, கிரணடாவில் 50 சதவீதக்குக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துவிட்டன. மிகப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால், சமாளிக்கமுடியாமல் திணறும் அந்த நாடுகள் சர்வதேச உதவியைக் கோரியுள்ளன.
இதையடுத்து ஜமைக்காவுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்களையும் கிரணடாவுக்கு 50,000 டாலர்களையும் இந்தியா உதவியாகவழங்கியுள்ளது.
ஜமைக்காவில் மொத்தமுள்ள 2.7 மில்லியன் மக்களில் 60,000 பேர் இந்திய வம்சாவளியினர். 89.000 மக்கள் தொகை கொண்டகிரணடாவில் சுமார் 300 இந்தியர்கள் வசிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications