மோசடி: பிரான்சில் தவிக்கும் நாமக்கல் இளைஞர்
நாமக்கல்:
போலி பாஸ்போர்ட், மோசடி புரோக்கர் மூலம் லண்டன் செல்ல முயன்ற நாமக்கல் வாலிபர் ஒருவர் பிரான்சில் பரிதவித்து வருகிறார்.
நாமக்கல் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் சுந்தரத்தின் மகன் தினேஷ். இவருக்கு லண்டனில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பாலகிருஷ்ணன் என்ற புரோக்கரிர் ரூ. 3 லட்சம் வாங்கினார்.
பாஸ்போர்ட்டே இல்லாத தினேஷின் போட்டோவை வேறு ஒருவரின் பாஸ்போர்ட்டில் ஒட்டி மோசடி செய்து, பாங்காக் வழியாகலண்டனுக்கு அனுப்பினார் பாலகிருஷ்ணன். ஆனால், லண்டன் விமான நிலையத்தில் தினேஷ் இங்கிலாந்து போலீசாரிடம் பிடிபட்டார்.
அவரிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களையும் பறிமுதல் செய்து அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பினர்.அத்தோடு திருந்தாத தினேஷ் மீண்டும் லண்டன் செல்ல முயன்றார்.
2 மாதம் கழித்து பாரீஸ் வழியாக லண்டன் அழைத்துச் செல்வதாகக் கூறிய பாலகிருஷ்ணன், தினேஷை பிரான்சுக்கு அனுப்பி வைத்தார்.அங்கு ஒருவர் தினேஷை லண்டனுக்கு அழைத்துச் செல்வார் என்று புரோக்கர் கூறியிருந்தார்.
ஆனால், பிரான்சுக்குச் சென்று 5 மாதங்கள் ஆகியும் தினேஷ், லண்டன் அழைத்துச் செல்லப்படவில்லை. அந் நாட்டு போலீசாரிடம்இதுவரை சிக்காத தினேஷ், உணவுக்கும், தங்குவதற்கும் சிரமப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
இந் நிலையில், லண்டன் அனுப்ப வேண்டுமானால், கூடுதலாக ரூ. 2 லட்சம் தர வேண்டும் என்று தினேஷின் தந்தை சுந்தரத்திடம்பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரம், நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து போலீஸார்பாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பிரான்சில் சிக்கியுள்ள தினேஷ் திரும்பி இந்தியா வர முயற்சிக்காதது ஏன் என்று தெரியவில்லை. அவர் இன்னும் லண்டன் செல்லும்கனவிலேயே இருப்பதாகத் தெரிகிறது.
தினேஷைப் போலவே நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பல இளைஞர்களும் ஏஜென்டுகளால் பிரான்சில் இறக்கி விடப்பட்டுஅலைகழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications