பண்ணையார் நினைவு நாள்: போலீஸ் உஷார் !
தூத்துக்குடி:
சென்னையில் போலீஸாரால் எண்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நாடார் சமுதாயப் பிரமுகர் வெங்கடேஷ் பண்ணையாரின்முதலாமாண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படவுள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி, சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைவராக இருந்தவர் வெங்கடேஷ் பண்ணையார். சென்னையில் கடந்த ஆண்டுசெப்டம்பர் 26ம் தேதி காலை சென்னை போலீஸாரால் அவரது அடுக்கு மாடிக் குடியிருப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
என்கெளண்டர் மரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும் இந்த சம்பவம் நாடார் சமுதாயத்தினர் மத்தியில் பெரும் கோபத்தைஏற்படுத்தியது. இந்த பரபரப்பை பயன்படுத்திக் கொண்ட திமுகவும், வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வியைதிருச்செந்தூர் தொகுதியில் நிறுத்தி எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றது.
இந் நிலையில் பண்ணையாரின் முதலாமாண்டு நினைவு தினம் நாளை திருச்செந்தூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரானஅம்மன்புரத்தில் அனுசரிக்கப்படவுள்ளது.
இதையொட்டி அம்மன்புரம், திருச்செந்தூர், ஆழ்வார்குறிச்சி, தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர தென்மாவட்டங்களிலும் சென்னையிலும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் பல்வேறு கட்சிப் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்த வருகிறார்கள். ஆனால் அதிமுகவைச்சேர்ந்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என ராதிகா செல்வி கூறியிருப்பதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications