இலங்கையில் விடுதலைப்புலிகள் 6 பேர் படுகொலை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் நடந்த இருவேறு சம்பவங்களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கருணாகோஷ்டியினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கருணாவின் சகோதரரும், அவரது 3 தளபதிகளும் விடுதலைப்புலிகளால்கொல்லப்பட்டனர். இந் நிலையில் கருணா கோஷ்டியினர் புலிகள் 6 பேரை சுட்டுக் கொன்றனர். இதனால் இருபிரிவினருக்கும் இடையே மோதல் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இச் சம்பவம் குறித்து இலங்கை அரசு, இத்தகைய வன்முறைகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கைக்குஊக்கமளிப்பதாக அமையவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளது.

சந்திரிகாவுக்கு ரணில் கடிதம்

இந் நிலையில் விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்குமாறு இலங்கைஅதிபர் சந்திரிகா குமாரதுங்காவிற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

புலிகளுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். பேச்சுவார்த்தை தொடர்பாக சந்திரிகாமுன்வைத்துள்ள தேசிய ஆலோசனைக் குழுவை பேச்சுவார்த்தை தொடங்கப்படுவதற்கு முன்பு அமைப்பதுதேவையற்றது.

பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட பின்பு சிக்கலான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அந்த நேரத்தில் தேசியஆலோசனைக் குழுவை அமைக்கலாம். அப்போது அந்தக் குழுவில் இடம் பெற எனது கட்சி விருப்பத்துடன்உள்ளது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+