போலி சாமியார்: போராட்டம் நடத்தும் கிராமம்
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே கொண்டமங்கலம் கிராமத்தில் மக்களை அச்சுறுத்தி வரும் போலி சாமியாரைக் கைதுசெய்யக் பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கொண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பவர் தன்னை சகல சக்திகளும் கொண்ட சாமியாராக அறிவித்துஒரு கோவிலையும் கட்டியுள்ளார்.
ஊரில் உள்ள 7 கோவில்களிலும் யாரும் சாமி கும்பிடக் கூடாது. தனது கோவிலில் மட்டுமே சாமி கும்பிடவேண்டும். தனது சொல்லைக் கேட்டுத்தான் எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டும். மீறி செய்தால் பில்லிசூன்யம் வைத்து விடுவேன் என கிராம மக்களை மிரட்டுவதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர பொது மக்களை மிரட்டி பணத்தைக் கறந்தும் வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்தச் சாமியார் பூபதி குறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றுகிராம மக்கள் புகார் கூறுகிறார்கள்.
இந் நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை கொண்டமங்கலம் கிராம மக்கள்முற்றுகையிட்டு போலி சாமியார் பூபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தினர்.