உள்ளாட்சி தேர்தல்: திமுகவுக்கு கிடைத்த அதிர்ச்சி
சென்னை:
உள்ளாட்சி இடைத்தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளதால் திமுகமற்றும் கூட்டணிக் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 1,093 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கைநேற்று காலை தொடங்கியது. இதையடுத்து வெளிவரத் தொடங்கிய முடிவுகளால் அதிமுக உற்சாகமடைந்துள்ளது.
இதுவரை வெளியான முக்கிய முடிவுகளில் பல அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. குறிப்பாக ராமநாதபுரம்நகராட்சித் தலைவர் பதவியை திமுகவிடமிருந்து அதிமுக வென்று சாதனை படைத்துள்ளது.
திமுக சார்பில்பவானி ராஜேந்திரன் ராமநாதபுரம் நகராட்சித் தலைவராக இருந்து வந்தார். மக்களவைத் தேர்தலில்போட்டியிட்டு எம்.பி. ஆனதால் தனது நகராட்சித் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் அங்குஇடைத்தேர்தல் நடந்தது.
இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராமமூர்த்தி 1,574 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் திமுகவைச் சேர்ந்த ரத்தினத்தைதோற்கடித்து வெற்றி பெற்றார். திருமங்கலம் நகராட்சித் தலைவர் பதவியையும் அதிமுக தக்க வைத்துக் கொண்டது.
சென்னை மாநகராட்சி 7வது வார்டுக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சண்முகம் வெற்றி பெற்றார்.இங்கு தான் வாக்குப்பதிவின் போது பயங்கர வன்முறை நடந்தது குறிப்பிடத்தக்கது. சேலம் மாநகராட்சி கவுன்சிலர்இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
நகராட்சி கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் திமுகவும், அதிமுகவும் சம பலத்தில் வென்றுள்ளன.மொத்தம் தேர்தல் நடந்த 16 இடங்களில் அதிமுக 7, திமுக 6, காங்கிரஸ் 1, பாஜக 1, சுயேட்சை 1 என வெற்றிகிடைத்துள்ளது.
கிராம பஞ்சாயத்துக்களுக்கு நடந்த தேர்தலில் அதிமுகவின் கை ஓங்கியுள்ளது. கடைசியாக முடிவு அறிவிக்கப்பட்ட50 இடங்களில் 26 இடங்களில் அதிமுக வென்றுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 20 இடங்களில்வென்றுள்ளன. பாஜக மற்றும் சுயேட்சைகளுக்கு தலா ஒரு வெற்றி கிடைத்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்து நின்று கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது திமுக மற்றும் அதன்கூட்டணிக் கட்சிகளுக்கு கலக்கத்தையும், ஆழ்ந்த சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications