ராகிங் கொடுமை: தற்கொலைக்கு முயன்ற மாணவர்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் ராகிங் கொடுமையைப் பொறுக்க முடியாத ஒரு மாணவர் கடலில்குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை மீனவர்கள் காப்பாற்றினர்.
இது தொடர்பாக 5 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இக் கல்லூரியில் ராகிங் கொடுமை தலைவிரித்தாடுகிறது.முதலாமாண்டு மாணவரான செளந்தரராஜனும் இக் கொடுமைக்குத் தப்பவில்லை.
இதையடுத்து கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது மீனவர்கள் காப்பாற்றி போலீஸாரிடம்ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணை நடத்தியபோது, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்தகாரணமாகவே தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து ராகிங் செய்த 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாகி விட்ட 3 பேரை போலீசார்தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications