மதுரை-டெல்லி எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறையாக மாற்றம்
சென்னை:
மதுரை-டெல்லி இடையிலான தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் இருமுறை ரயிலாகமாற்றப்பட்டுள்ளது.
மதுரைக்கும், டெல்லிக்கும் இடையே தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் ஒரு முறைஇயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் சமீபத்தில் மதுரையில் மத்திய ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவால் தொடங்கி வைக்கப்பட்டது.
தொடக்க விழாவின்போது இந்த ரயிலை வாரம் இருமுறை ரயிலாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடப்பட்டது. இக்கோரிக்கையை லாலு உடனடியாக ஏற்றுக் கொண்டார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரையிலிருந்து டெல்லிநிஜாமுதீனுக்கு சனி மற்றும் திங்கள்கிழமைகளில் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். அதேபோல,டெல்லியிலிருந்து மதுரைக்கு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும்.
மதுரையிலிருந்து இரவு 11.45 மணிக்கு ரயில் டெல்லி புறப்படும். டெல்லியிலிருந்து காலை 7.25 மணிக்கு மதுரைபுறப்படும். அக்டோபர் 4ம் தேதி முதல் மதுரையிலிருந்து இந்த ரயில் இயக்கப்படும். அதேபோல, அக்டோபர் 7ம்தேதி முதல் டெல்லியிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கும்.