செம்மொழி: கருணாநிதிக்கு திமுக பாராட்டு கூட்டம்
சென்னை:
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க உதவியதற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு வட சென்னை திமுகசார்பில் இன்று பாராட்டுக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கோரிக்கையைத்தொடர்ந்து மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டும், நன்றியும் தெரிவித்துவருகின்றனர். இந் நிலையில் வட சென்னை திமுக சார்பில் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்றுபாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கும் பாராட்டு விழாவில், பன்னாட்டுத்தமிழுறவு மன்றத் தலைவர் வா..சேதுராமன் தலைமை தாங்குகிறார்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.சே. குழந்தைசாமி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,தமிழறிஞர் மணவை முஸ்தபா உள்ளிட்டோர் கருணாநிதியை வாழ்த்திப் பேசுகிறார்கள்.