இந்தியா மீதான அமெரிக்க தடைகள் நீக்கம்
வாஷிங்டன்:
அணு மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ஆய்வு நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையைஅமெரிக்கா நீக்கியுள்ளது.
கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங்கும் அதிபர் புஷ்சும் சந்தித்துப் பேசியதையடுத்து இந்தத் தடை நீக்கம்அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அதன் துணை ஆராய்ச்சி அமைப்புகள் மீதான தடைநீக்கப்பட்டுள்ளதால் விண்வெளி ஆய்வு, நவீன செயற்கைக் கோள்கள், அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டுகள்தயாரிப்புக்குத் தேவையான உயர் தொழில்நுட்பக் கருவிகளை அமெரிக்காவில் இருந்து இந்தியா பெற முடியும்.
அதே போல இந்திய அணு சக்தித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து ஆராய்ச்சி மையங்கள் மீதான தடைகளும்நீக்கப்பட்டுள்ளன. இதனால் அணு ஆராய்ச்சித் தொடர்பான கருவிகளையும் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்துஇந்தியா பெற முடியும்.
அதே நேரத்தில் இந்தியாவுக்கு கருவிகள், தொழில்நுட்பத்தை அமெரிக்க நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும்போதுஅதை அமெரிக்க பாதுகாப்புத்துறை கண்காணிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.