For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலட்சுமி: இளங்கோவனின் ஜாமீன் தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

சிவகாசி:

Jayalakshmi ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்தது, பின்னர் அவரையும் குடும்பத்தினரையும் கடத்தியது ஆகியவழக்குகளில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் இளங்கோவனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கசிவகாசி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலட்சுமியின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளவர் மதுரை திடீர் நகர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்.ஜெயலட்சுமியின் புகாருக்குப் பிறகு அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால், ஜெயலட்சுமி விவகாரத்தில் தனது பெயர் அடிபட்டவுடன் தலைமறைவாகி விட்ட இளங்கோவன்சமீபத்தில் தான் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஜெயலட்சுமியைக் கடத்திய வழக்கில் இவரது மைத்துனர் முருகவேல் ஏற்கனவே கைதாகி சிறையில்அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இளங்கோவன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு சிவகாசிநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாரனேரி போலீஸார், இளங்கோவனை போலீஸ் காவலில்வைத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவும் விசாரிக்கப்பட்டது.

இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி ஆபிரகாம் லிங்கன், இளங்கோவனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தார். அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாரனேரி போலீசாருக்கு அனுமதி அளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X