கிருஷ்ணா நீர் வர ஜெயலலிதா தான் காரணம்: ஓ.பி
சென்னை:
சென்னைக்கு கிருஷ்ணா நீர் விடுவிக்கப்பட்டிருப்பதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிகளே காரணம் என தமிழகபொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த நெடுஞ்சாலைத் துறையின் விழாவில் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் ஆந்திர முதல்வர்ராஜசேகர ரெட்டியும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பாலு, சென்னைக்கு கிருஷ்ணா நீரைத் திறந்துவிடுமாறு திமுக தலைவர் கருணாநிதி உங்களிடம் கோரிக்கைவிடுக்கச் சொன்னார் என்றார். இதற்கு பதிலளித்த ரெட்டி, 15ம் தேதிக்குள் தண்ணீர் சென்னையை வந்தடையும் என்றுஅறிவித்ததோடு நீரையும் உடனே திறந்துவிட்டார்.
இந் நிலையில் இதே கோரிக்கையுடன் முதல்வர் ஜெயலலிதாவும் நேற்று ரெட்டியை சந்தித்தார்.
அப்போது ஸ்ரீசைலம் அணையிலிருந்து சென்னைக்கு 21 டி.எம்.சி நீர் திறந்து விடப்பட்டிருப்பதாகஜெயலலிதாவிடம் ரெட்டி தெரிவித்தார். இந்த நீர் 15 நாட்களுக்குள் சென்னை எல்லையை வந்தடையும் என்றும்கூறினார்.
இந் நிலையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைவர் கருணாநிதியின் முயற்சி காரணமாகவே கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக சில பத்திரிக்கைகளில் தவறானசெய்திகள் வெளியிடப்படுகின்றன.
முதல்வர் ஜெயலலிதாவின் தொடர்ந்த முயற்சிகள் காரணமாக, இரு மாநில தொழில்நுட்ப நிபுணர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்தார் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி. பின்னர் இரு மாநில பொறியாளர்கள் அடங்கிய குழு தற்போதைய நிலையில்சென்னைக்கு எவ்வளவு தண்ணீர் விடுவது என்பது குறித்து கூட்டாக ஆய்வு நடத்தின.
இதன் தொடர்ச்சியாக முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து தான்கிருஷ்ணா நதியிலிருந்து கூடுதல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே கிருஷ்ணாவிலிருந்து தண்ணீர் விடுவிக்கப்பட்டிருப்பதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிகளே முக்கியக் காரணம்என்று கூறியுள்ளார் பன்னீர்.
-
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
வேலூர், ராணிப்பேட்டைக்கு ஹை அலர்ட்! உஷாரா இருங்க மக்களே! வானிலை மையம் வார்னிங் -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு!












Click it and Unblock the Notifications