பாரிஸ்: இந்தோனேஷிய தூதரகத்தில் குண்டு வெடிப்பு
Subscribe to Oneindia Tamil
பாரிஸ்:
பாரிஸ் நகரில் உள்ள இந்தோனேஷிய தூதரகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை தூதரக கட்டடத்தின் வெளிப் பகுதியில் இந்தோனேஷிய கொடிக் கம்பத்தின் அருகே நடந்தஇந்த குண்டிவெடிப்பில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதில் 4 தூதரக ஊழியர்கள் உட்பட 10காயமடைந்தாலும், யாருக்கும் பலத்த காயம் இல்லை.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தை பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் டி விலேபின் நேரில்பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாதஅமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றார்.
குண்டுவெடித்ததில் அந்தத் தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களும், அருகிலிருந்தகார்களும் சேதமடைந்தன.












Click it and Unblock the Notifications