ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை சர்வதேச விருது
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது வழங்கி கெளரவிக்க உள்ளது சர்வதேச மனித உரிமைகள்பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உக்ரைன் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஐநா சபையின் அதிகாரப்பூர்வ ஆலோசனைஅமைப்பான சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு, ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருதினை வழங்கிகெளரவிக்கவுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காக ஜெயலலிதா ஆற்றிய பணிகளைப்பாராட்டி இந்த விருது அளிக்கப்படுகிறது.
தாயின் பெயரின் முதலெழுத்தை குழந்தைகள் தங்களது இனிஷியலாக வைத்துக்கொள்ள ஆணை,இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடக்கம், இந்தியாவிலேயேமுதன்முறையாக பெண் போலீஸ் கமாண்டோ படை, துணிச்சலான காரியம் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லாபெயரில் விருது,
பெண் சிசுவதையைத் தடுக்கும் தொட்டில் குழந்தைத் திட்டம், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர்,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்,
வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் திருமணமான ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புமற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தது ஆகிய செயல்களுக்காக இந்த விருது தரப்படுகிறது.
வரும் 11ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும்விழாவில் ஜெயலலிதாவுக்கு இந்த விருது வழங்கப்படும்.
இந்த விருது, இதற்கு முன் ஐநா சபை பொதுச் செயலாளர் கோபி அன்னான், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீன்,ஐஸ்லாண்ட் பிரதமர் டேவிட் ஆட்ஸன் போன்றோரும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications