பொடா மறு ஆய்வு குழு: நீதிபதி சஹாரியா ராஜினாமா
டெல்லி:
பொடா மறு ஆய்வுக் குழு தலைவர் பதவியை நீதிபதி சஹாரியா திடீரென ராஜினாமா செய்தார்.
பொடா சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் அச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைஓராண்டுக்குள் மறு ஆய்வு செய்து முடிக்கும்படி நீதிபதி சஹாரியா தலைமையிலான குழுவை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இந் நிலையில் நீதிபதி சஹாரியா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தைகுடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் சமர்ப்பித்துள்ளார். அக் கடிதத்தில், சொந்த காரணங்களுக்காகப் பதவியைராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சஹாரியாவின் ராஜினாவினால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆராய, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல் அவசர கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார்.
3 பேர் கொண்ட பொடா மறு ஆய்வுக் குழுவில் இப்போது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ரஹ்மான் மற்றும்ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி அரவிந்த் எம். இனாம்தார் ஆகியோர் உள்ளனர்.
சென்னையில் சஹாரியா:
தனது பதவியை ராஜினாமா செய்த கையோடு சொந்த வேலை விஷயமாக சென்னை வந்த சஹாரியா மானநிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
பொடா மறு ஆய்வுக் குழு தலைவராக நான் ஆற்றிய பணிகள் குறித்து எனக்கு முழு திருப்தியே. இந்த மாதம் 23ம்தேதிக்குள் பொடா வழக்குகள் அனைத்தையும் விசாரித்து முடித்துவிடலாம் என்று நினைத்தேன்.
ஆனால், கமிட்டியின் செயல் காலத்தை மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துவிட்டது. அவ்வளவு நாட்கள்இப் பதவியில் நீடிக்க எனது சொந்தப் பணிகள் இடம் தரவில்லை. இதனால் விலகுகிறேன்.
எனது முடிவுக்கு அரசியல் நெருக்கடிகள் எதுவும் காரணமில்லை. சொந்த வேலைகள் தான் காரணம் என்றார்.
வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் 9 பேர் மீது போடப்பட்ட பொடா வழக்குகள் செல்லாது என அதிரடி தீர்ப்புவழங்கியவர் நீதிபதி சஹாரியா என்பது குறிப்பிடத்தக்கது.