பொடா மறு ஆய்வு குழு: நீதிபதி சஹாரியா ராஜினாமா
டெல்லி:
பொடா மறு ஆய்வுக் குழு தலைவர் பதவியை நீதிபதி சஹாரியா திடீரென ராஜினாமா செய்தார்.
பொடா சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் அச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைஓராண்டுக்குள் மறு ஆய்வு செய்து முடிக்கும்படி நீதிபதி சஹாரியா தலைமையிலான குழுவை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இந் நிலையில் நீதிபதி சஹாரியா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தைகுடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் சமர்ப்பித்துள்ளார். அக் கடிதத்தில், சொந்த காரணங்களுக்காகப் பதவியைராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சஹாரியாவின் ராஜினாவினால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆராய, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல் அவசர கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார்.
3 பேர் கொண்ட பொடா மறு ஆய்வுக் குழுவில் இப்போது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ரஹ்மான் மற்றும்ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி அரவிந்த் எம். இனாம்தார் ஆகியோர் உள்ளனர்.
சென்னையில் சஹாரியா:
தனது பதவியை ராஜினாமா செய்த கையோடு சொந்த வேலை விஷயமாக சென்னை வந்த சஹாரியா மானநிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
பொடா மறு ஆய்வுக் குழு தலைவராக நான் ஆற்றிய பணிகள் குறித்து எனக்கு முழு திருப்தியே. இந்த மாதம் 23ம்தேதிக்குள் பொடா வழக்குகள் அனைத்தையும் விசாரித்து முடித்துவிடலாம் என்று நினைத்தேன்.
ஆனால், கமிட்டியின் செயல் காலத்தை மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துவிட்டது. அவ்வளவு நாட்கள்இப் பதவியில் நீடிக்க எனது சொந்தப் பணிகள் இடம் தரவில்லை. இதனால் விலகுகிறேன்.
எனது முடிவுக்கு அரசியல் நெருக்கடிகள் எதுவும் காரணமில்லை. சொந்த வேலைகள் தான் காரணம் என்றார்.
வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் 9 பேர் மீது போடப்பட்ட பொடா வழக்குகள் செல்லாது என அதிரடி தீர்ப்புவழங்கியவர் நீதிபதி சஹாரியா என்பது குறிப்பிடத்தக்கது.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications