வைகோ: பொடா நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
வைகோ மீதான பொடா வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில்தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தன் மீதான பொடா வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி மறுத்ததை எதிர்த்துமதிமுக பொதுச் செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், வைகோ மற்றும் 8 மதிமுகவினர் மீது விசாரணை நடத்த பூந்தமல்லி பொடாநீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.
வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான பொடா வழக்குக்கு முகாந்திரமில்லை என்று தீர்ப்பளித்த பொடா மறு ஆய்வுக்குழு, அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.இதையடுத்து வைகோ மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக பொடா நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
ஆனால், வாபஸ் பெறுவதற்கு முறையான காரணங்களை தமிழக அரசு தாக்கல் செய்யவில்லை என்று கூறியபொடா நீதிமன்ற நீதிபதி, வழக்கை வாபஸ் பெற அனுமதி தர மறுத்துவிட்டார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் வைகோ. இந்த வழக்கு இன்று நீதிபதி வரியவா,நீதிபதி சேமா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ மீதான வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த பொடா நீதிமன்றத்துக்கு இடைக்காலத்தடை விதித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உரிய பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும்உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications