மதுரை உயர் நீதிமன்ற கிளை அமைத்தது செல்லும்
சென்னை:
மதுரையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை அமைப்பது தொடர்பான குடியரசுத் தலைவரின் பிரகடனம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை அமைப்பது தொடர்பான குடியரசுத் தலைவரின் அறிவிக்கையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்தவழக்கறிஞர்கள் சுப்ரமணியம் மற்றும் நான்கு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி பிரபா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இறுதித் தீர்ப்பைஅளித்துள்ளது.
அதில், மாநில மறு சீரமைப்பு சட்டம் 51(2)வது பிரிவின் கீழ் மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டுள்ளது சட்டப்படி செல்லும்.மாநில மறு சீரமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய மாநிலமாகவே தமிழ்நாடு கருதப்பட வேண்டும்.
எனவே அந்தச் சட்டத்தின் கீழ் மதுரையில் உயர் நீதிமன்றக் கிளையை நிறுவியதில் எந்த சட்ட மீறலும் இல்லை.
பழைய மாநிலம், புதிய மாநிலம் என்ற பாகுபாட்டை மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. எனவே மதுரையில் அமைந்துள்ள புதியஉயர் நீதிமன்றக் கிளை சட்டப்படி செல்லுபடியாகும்.
குடியரசுத் தலைவர் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நாகப்பட்டனம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் மதுரை கிளையில் இடம்பெறாது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ள 9 நீதிபதிகள் குழு பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது உள்ள 49 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையை 59 ஆக அதிகரிக்க மத்திய அரசும், மாநில அரசும்டிசம்பர் 31ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கும் கூடுதல் நீதிபதிகளை நியமிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
-
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி?












Click it and Unblock the Notifications