மதிமுக விவசாயிகள் மாநாட்டில் வி.பி.சிங் உரை
கோவை:
இந்தியாவில் உள்ள முக்கிய நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும். இதனால் வறட்சி, வறுமை ஆகியவைஒழிந்து மக்கள் மனம் மகிழும் என்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் பல்லடத்தில் மதிமுக விவசாய அணி சார்பில் விவசாயிகள் மாநாடு நடந்தது. இதில் வி.பி.சிங்,மதிமுக பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் அவர் பேசுகையில், தென்னிந்தியநதிகளை இணைப்பது சாத்தியமான ஒன்று என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே முதல் கட்டமாகதென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும்.
நதி நீரைப் பங்கிடுவது தொடர்பாக பொதுவான கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும். இதற்காக தேசியஅளவில் பொதுவான விவாதம் நடத்தப்பட வேண்டும், அனைத்து மாநில முதல்வர்களும் இந்தக் கூட்டத்தில்பங்கேற்க வகை செய்ய வேண்டும்.
பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புடன் சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நடத்திய பேச்சுவார்த்தை இருநாடுகளுக்கிடையே சுமூகமான உறவை மேம்படுத்தியுள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி என்றார் அவர்.
மதிமுக விவசாயிகள் மாநாடு இன்றும் நடைபெறுகிறது.