ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் கடத்தல்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்றனர். அவர்களது படகுகளில் வெடிபொருட்கள் இருந்ததாக இலங்கை கடற்படை கூறுகிறது.

சமீபத்தில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 20 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படைவீரர்கள் பிடித்துச் சென்றனர். அதில் 15 பேர் விடுவிக்கப்பட்டனர். மீதி 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.அவர்களையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரும் காலவரையற்றவேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந் நிலையில் மீண்டும் 10 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கடத்திச் சென்றுள்ளனர். மண்டபம்பகுதியைச் சேர்ந்த இந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் காண்டிருந்தபோது அவர்களை இலங்கைகடற்படையினர் வளைத்துப் பிடித்தனர்.

பின்னர் அவர்களை இலங்கை கொண்டு சென்றனர். பிடிபட்ட மீனவர்களிடமிருந்து 250 கிலோ ஜெலிக்னைட், 850டெட்டனேட்டர்கள், 115 அடி நீள பியூஸ் வயர் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படைகூறுகிறது.

ஏற்கனவே கொந்தளித்துப் போயுள்ள ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே இந்தத் தகவல் மேலும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+