For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் கட்டட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே ஆயிரக்கணக்கான கட்டடத் தொழிலாளர்கள் இன்றுகாலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. கட்டடத்தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும், இலவச சிகிச்சை தரப்பட வேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

இதில் ஆயிரக்கணக்கான கட்டடத் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். உண்ணாவிரதம் இருப்போரை வாழ்த்திபாமக தலைவர் ஜி.கே.மணி, திமுக தொழிற்சங்க தலைவர் செ.குப்புசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X