ஜெயலலிதாவுக்கு இன்று தங்கத் தாரகை விருது
சென்னை:
ஐநாவின் ஆலோசனை அமைப்பான சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் தங்கத் தாரகை விருது முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று வழங்கப்படுகிறது.
சென்னைக்குக் கிருஷ்ணா நீரைக் கேட்டுப் பெறுவதற்காக கடந்த மாதம் 30-ம் தேதி ஜெயலலிதா தனது தோழிசசிகலாவுடன் ஹைதராபாத் சென்றார். ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியைச் சந்தித்துப் பேசிய பின்,ஹைதராபாத்தில் தனக்குச் சொந்தமான திராட்சை தோட்டத்தில் 10 நாட்கள் ஓய்வெடுத்தார்.
ஓய்விற்குப் பின் ஜெயலலிதா நேற்று மாலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவர் இன்று மாலைசென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் விழாவில் தங்கத் தாரகை விருதுபெறுகிறார்.
தொட்டில் குழந்தைகள் திட்டம், பெண் குழந்தைகள் கல்வி பயில்வதற்கான திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள்,ஆதிதிராவிட, பழங்குடியினர் மற்றும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு கல்விச்சாலைகளுக்குசெல்வதற்காக இலவச சைக்கிள்கள்;
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெண் கமாண்டோக்கள் உள்ளிட்ட மகளிர் நலம் சார்ந்த பல்வேறுதிட்டங்களை அமல்படுத்தியமைக்காக உக்ரைனில் உள்ள ஐநா சபையின் ஆலோசனை அமைப்பான சர்வதேசமனித உரிமை பாதுகாப்புக் குழு இவ்விருதை வழங்குகிறது.
இவ் விழாவில் பங்கேற்பதற்காக அக் குழுவின் தலைவி நதாலியா கிறிவுத்சா, தலைவர் பியோதர் வாசிலெனிகோ,இயக்குநர் ஆல்பர்ட் கிட்சர் ஆகியோர் விமானம் மூலம் சென்னை வந்தனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வருக்கு இவ்விருது வழங்குவது குறித்துமகிழ்ச்சியடைவதாக அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications