விமானியில்லா உளவு விமானம்: இந்தியா சோதனை
Subscribe to Oneindia Tamil
பாலாசூர்:
இந்தியா தயாரித்துள்ள விமானியில்லாமல் இயங்கும் உளவு விமானமான லக்ஷ்யா இன்று வெற்றிகரமாகசோதனையிட்டுப் பார்க்கப்பட்டது.
எதிரி நாட்டு வான் பரப்பில் நுழைந்து உளவு பார்த்து, வீடியோ படங்களை எடுத்து நேரடியாக ஒளிபரப்புசெய்துவிட்டு, திரும்பி வந்து பாராசூட் மூலம தரையிறங்கும் திறன் கொண்டது லக்ஷ்யா.
இந்த விமானம் இன்று ஒரிஸ்ஸா மாநிலம் சண்டிபூரில் உள்ள ஏவுகணை சோதனை மையத்தில் வெற்றிகரமாகபரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
பெங்களூரில் உள்ள ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் எஸ்டாப்ளிஷ்மெண்ட் நிறுவனம் இதனைத்தயாரித்துள்ளது.












Click it and Unblock the Notifications