65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
சென்னை:
தமிழகம் முழுவதும் 65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
தமிழகத்தில் போலியோ (இளம்பிள்ளைவாதம்) நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக இந்த ஆண்டு இதுவரை 3முறை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டுள்ளது. நான்காவது முறையாக நேற்று போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பொதுஇடங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவமனைகள்,சத்துணவு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாம்களில் போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது.
இதில் விட்டுப் போன குழந்தைகளுக்காக வருகிற நவம்பர் 21ம் தேதி மீண்டும் போலியோ சொட்டு மருந்துவழங்கப்படுகிறது. ஏற்கனவே சொட்டு மருந்து உட்கொண்டவர்களும் இதில் கலந்து கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications