நான் ஜெவின் கைக்கூலி: எஸ்.வி.சேகர் பெருமிதம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் கைக்கூலியாக இருப்பதில் பெருமையடைகிறேன் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனை விமர்சித்து அதிமுகவைச் சேர்ந்த நடிகர்எஸ்.வி.சேகர் சமீபத்தில் வேலூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசினார்.
இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் எஸ்.வி.சேகரின் வீட்டைமுற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர் வீடு உள்ள மந்தைவெளி 5வது குறுக்குத் தெருவுக்கு, மாநில துணைப் பொதுச்செயலாளர் திருமாறன் தலைமையில் 40 பேர் ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைதுசெய்து அங்கிருந்து கொண்டு சென்றனர்.
இந்தப் போராட்டம் குறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில்,
வேலூரிலும், சென்னையிலும் திருமாவளவன் பற்றி சில உண்மைகளை சொன்னேன். தமிழ் பாதுகாப்பு இயக்கம்நடத்துபவர் பெயரில் தமிழ் இல்லை. தமிழ் பண்பாட்டு உடை அணியாமல் ஜீன்ஸ் அணிகிறார் என்று கூறினேன்.நான் பேசியதற்கு பதில் கூற முடியாதவர்கள் என் வீட்டுமுன் பேராட்டம் நடத்துகிறார்கள்.
போராட்டம் நடத்தியவர்கள் நான் சங்கராச்சாரியாரின் கைக்கூலி என்றார்கள். அவர் எந்த அரசியல் கட்சியும்நடத்தவில்லை. ஜெயலலிதாவின் கைக்கூலி என்று கூறினார்கள். ஜெயலலிதாவின் கைக்கூலியாக இருப்பதில்பெருமை அடைகிறேன்.
தமிழ் செம்மொழி ஆனதற்காக கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்த அமைப்பின் பெயர் தமிழ் அகாடமி. அகாடமிஎன்ற சொல்லுக்கு தமிழ் சொல் கிடையாதா? பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது பெயரை மருத்துவர்ராமனடிமை என்று மாற்றிக் கொள்வாரா?
தமிழனுக்கு இன்று தேவை உணவு, உடை, இருப்பிடம், நல்ல கல்வி, தனிமனித ஒழுக்கம். இதை கொடுப்பதற்குஎன்ன வழி என்று யோசிக்க வேண்டும். தமிழ் வளர்ந்து நிற்கும்போது அதைப் பேச தமிழன் உயிரோடு நிற்கவேண்டும்.
சிந்திப்பதை விட்டுவிட்டு ஞாயிற்றுக்கிழமை பொழுதுபோகவில்லை என்றால் யாரையோ திருப்திப்படுத்தபோராட்டம் நடத்த கிளம்பிவிடுகிறார்கள். நான் எங்கு சென்றாலும் முற்றுகை நடத்தப் போவதாக கூறியுள்ளார்கள்.தாராளமாக நடத்தட்டும் எதையும் சந்திக்கும் துணிச்சலுடன் தான் ஜெயலலிதா தலைமையை ஏற்று இருக்கிறேன்என்றார் எஸ்.வி.சேகர்.












Click it and Unblock the Notifications