ஜாதிக் கட்சிகள்: விஜய்காந்த் மீண்டும் தாக்கு
சென்னை:
ஜாதியைச் சொல்லி ஓட்டு கறக்கும் கட்சிகளுக்கு விஜய்காந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வழக்கம்போல் பா.ம.கவை மறைமுகமாகத் தாக்கி நமது விஜய்காந்த் என்ற தனது ரசிகர் மன்ற இதழில்விஜய்காந்த் எழுதியுள்ள கடிதம்:
என் பிறந்த நாளை ஏழைகளுக்கு உதவும் நாளாக கொண்டாடி ஏழைகளுக்கு இயன்றதைச் செய்த ரசிகர்களின்உழைப்பைப் பாராட்டுகிறேன். சோதனைகள் பல கடந்து கஜேந்திரா வந்தது. உங்கள் ஆதரவுடன் வெற்றி நடைபோடுகிறது.
அடுத்து நெறஞ்ச மனசு படம் தமிழ் மண்ணின் மனத்துடன் உருவாகிறது. தமிழர்களுக்கே உரிய பாசம், வீரம்,நேசம் கலந்து உருவாகிறது.
என் கொள்கை என்னவென்றே தெரியாமல் சிலர் நான் இந்தக் கட்சியில் சேரப் போகிறேன். அந்தக் கட்சியில்இணையப் போகிறேன் என்று வாய்ப்பந்தல் போடுகிறார்கள். நாங்கள் நடத்துவது லெட்டர் பேட் கட்சியோ,ஜாதியைச் சொல்லி காட்டி ஓட்டு கறக்கும் ஜாதி அமைப்போ அல்ல. நாங்கள் நடத்துவது மக்கள் மன்றம், மக்கள்இயக்கம்.
ஜாதிபேதம் இல்லாமல் எல்லோரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும், மதத்தைவிட மனித நேயம் முக்கியம்என்று நினைப்பவர்கள்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் விஜய்காந்த் கூறியுள்ளார்.