அரவிந்தர் ஆசிரமத்தில் செக்ஸ் கொடுமை !
டெல்லி:
பாண்டிச்சேரி ஆரோவில் பகுதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்கள் பாலியல்ரீதியில்கொடுமைப்படுத்தப்படுவதாக அங்கு தங்கியுள்ள 5 பெண்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்கொடுத்துள்ளனர்.
ஆசிரமத்தைச் சேர்ந்த 5 பேரும் தங்களது பெயர்களைக் குறிப்பிடாமல் புகார் கொடுத்துள்ளதாக தேசிய மகளிர்ஆணையத் தலைவியான பூர்ணிமா அத்வானி கூறியுள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சியொன்றில் பேசிய பூர்ணிமா, அரவிந்தர் ஆசிரமம் மீது கற்பழிப்பு புகார் எதுவும்கூறப்படவில்லை. ஆனால் பாலியல்ரீதியாக பெண்கள் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் தங்கியுள்ள அறைகளில் வந்து ஆண்கள் சிறு நீர் கழிப்பது, பெண்கள் தங்கியுள்ள அறைகளின்சுவர்களில் அசிங்கமான வார்த்தைகளை எழுதி வைப்பது போன்ற செயல்களில் சில ஆண்கள் ஈடுபடுவதாகவும்இவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளோம் என்றார்.
ஆரோவில் ஆசிரமத்தில் போதைப் பொருள்கள் புழக்கம், முறைகேடான பாலுறவு போன்றவற்றில் அங்குதங்கியுள்ள வெளிநாட்டவரும், உள்நாட்டினரும் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications